கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண்பிரிவு வகுப்புகள் துவங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு)
இளமறிவியல் மற்றும் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2026-2027
கல்லூரி தொடக்க நாள் 16.09.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், வேளாண்மைப் பிரிவால் வழங்கப்படும் இளமறிவியல் பட்டப்படிப்புகள் (UG) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டயப்படிப்புகளுக்கான (Diploma) மாணவர் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த இணையதள விண்ணப்பங்கள் பெறப்பெற்றன.
மாணவர் சேர்க்கையின் தரவரிசைப்பட்டியல் 03.07.2026 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து. 09.07.2026 முதல் பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இறுதிக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 10.09.2026 அன்று நிறைவடைந்தது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகள், மேலும் பட்டயப் படிப்புகளில் சேர்க்கைப் பெற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் 16.09.2026 அன்று தொடங்கப்பட உள்ளன.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவிற்கு 17.09.2026 அன்று வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மாணவர்கள் தங்களின் சேர்க்கை பெற்ற கல்லூரிகளுக்கு, குறிப்பிடப்பட்ட தேதிகளில் நேரில் சென்று சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





