கோவையில் கல்லூரி அருகே மைதானத்தில் கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

கோவையில் தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்!!!

கோவையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து அதிக அளவில் போதை பொருட்கள் படைகள் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் நாள்தோறும் சிக்கி வருகின்றனர். இருந்த போதும் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது மைதானத்தில் மறைத்து வைத்து இருந்த கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை கைப்பற்றி காவல் துறை நடத்திய விசாரணையில், அருகில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா , கோவை உடையாம்பாளையம் பகுதியில் சேர்ந்த ஜான் பெட்டர், போத்தனூர் கணேசா புரத்தைச் சேர்ந்த முத்து ஆகியோர் நான்கு பேர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்- ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா...

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...