Header Top Ad
Header Top Ad

கோவிலில் விளையாட்டுப் போட்டி; பக்தர்கள் உற்சாகம்

கோவை: வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கோவை வைசியாள் வீதி பகுதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இதன் கும்பாபிஷேக பெருவிழா மற்றும் மண்டல பூஜை கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாக்கு பிறகு தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது இந்த 48 நாளும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.

Advertisement

இதில் பன்னிரண்டாவது நாளன்று ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் என்ற விளையாட்டு போட்டி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

கோயிலின் கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50 வகையான போட்டிகள் மற்றும் இரண்டு மெகா போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை 3 வயது வியானிகா வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராணி விஜயகுமார், மகேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles