கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 40 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியமாக 770 வழங்க வேண்டும்,
துப்புரவு பணிக்காக சேர்ந்த மாற்று சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சாதிய அடிப்படையில் பணி வழங்கும் முறையை உடனடியாக கைவிட வேண்டும்,

மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமானது நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோனியம்மன் கோவிலில் இருந்து மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்த 40க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பாலியல் புகாரில் கோவை பெண் எஸ்ஐ மீது வழக்கு

கோவை நான்காவது பட்டாலியன் பாலியல் புகார் வழக்கில், கமாண்டன்ட்டை தொடர்ந்து பெண் எஸ்ஐ புஷ்பகுமாரி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.