எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும்- கோவையில் காங்கிரஸ் புகார்

கோவை: எடப்பாடி பழனிச்சாமி மீது கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செல்வப்பெருந்தகை குறித்து அவதூறுவதாக பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் காங்கிரஸ் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்று தரகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கடந்த 24-ம் தேதி அன்று ஊட்டியில் நடைபெற்ற பரப்புரையில்
பேசி உள்ளார்.

மேலும் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்று அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பேசி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுக்க வேண்டும் வகையிலும் கெட்ட எண்ணத்திலும் மற்றும் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனவும் பரப்புரை மற்றும் சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோவை மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார்,காய்தரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டாக கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...