இது தான் ரோடா? பரிதவிக்கும் பீளமேடு மக்கள் – இந்த வீடியோவை பாருங்க…!

கோவை: பீளமேடு பகுதியில் பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவையில் புதிய சாலை பணிகள், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது மற்றும் விடுபட்ட சாலை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி காரணமாக தோண்டப்பட்ட சாலைகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

கொடிசியா ரோடு 23வது வார்டுக்குட்பட்ட ஜிஆர்ஜி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தெருவில் தார் சாலை முழுமையாக சேதமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் கூறுகையில், “சாலை பல மாதங்களாக மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் நடந்து கூட செல்ல முடியாது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும்” என்றனர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...