கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மொபைல் கடையின் ஷட்டரை உடைத்து 20 செல்போன்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட அனைத்து செல்போன்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவையில் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு நினைவாக, நாளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு 2,000 போலீசார் மாநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கோவை சிவானந்தா காலனியில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.