கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்sதில் ரூ.1.05 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால், சிறுபாலம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட உலமாக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவை கணுவாய் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.