கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகர போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் ராதாகிருஷ்ணன் தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



