வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை; போலீசார் நடவடிக்கை

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகர போலீசார் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் ராதாகிருஷ்ணன் தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

2 மாத ஊதியம் எங்கே? மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பெண்கள் கோவையில் குமுறல்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Latest News Coimbatore

Video

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபத்து- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன்...