கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு தேதி அறிவிப்பு!

கோவை: கோவை நேரு ஸ்ட்டியம் அருகே கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை நவம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இது கோவைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோயம்புத்தூர் விழா இன்று முதல் துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விழால் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவை விழாவின் தொடக்க நிகழ்வாக கொடிசியா மைதானத்தில் SKY DANCE எனப்படும் ஒளி, ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்த பின் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

Advertisement

இந்த நிகழ்ச்சி வியந்து பார்க்கும் அளவிற்கு நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் சிறப்புடன் சிறப்பாக நடப்பட்டு வருகிறது. இந்த விழா 50 ஆண்டுகள் கடந்தும் நம் மண்ணின் பெருமையை சொல்லும்.

அனைத்துத் துறைகளிலும் ஒரு மாவட்டம் சிறந்து விளங்குகிறது என்றால் அது கோவை மாவட்டம் தான். அத்தகைய சான்றோர்கள் உருவாக்கிய மண் கோவை மண்.

Advertisement

வரும் 26 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அது கோவைக்கு பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும். முதலமைச்சரின் எண்ணங்களைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும். அதிலும் கோவைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும்பொழுது எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிவார்.

நானும் என்னுடைய ஊருக்கு சென்றால் YI- Young Indian சட்டையை தான் அணிவேன். இனி ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பங்கும் இந்த கோவை விழாவில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த கோவை விழா நம்முடைய விழா குடும்ப விழா. இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...