இருகூரில் பட்டப்பகலில் துணிகரம்; வீடு புகுந்து பைக் திருடும் கும்பல் – CCTV Video

கோவை: இருகூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து விலை உயர்ந்த பைக்கை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்த CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருது விக்னேஷ். இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் இருகூர் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். கல்லூரி செல்வதற்காக இவர் பயன்படுத்தி வந்த R15 பைக் செயின் அறுந்து பழுதான நிலையில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே நேற்று காலை 7 மணிக்கு அங்கு ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த வாலிபர்கள், காம்பவுண்ட் கேட்டைத் திறந்து உள்ளே புகுந்தனர்.

மேலும், பூட்டப்பட்டு இருந்த பைக்கின் லாக்கை உடைத்து, பழுதாகி நின்ற அந்தப் பெரிய வாகனத்தைச் சத்தமில்லாமல் உருட்டிச் சென்றனர்.

Advertisement

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் “இந்த கும்பல் முதல் நாளே நோட்டமிட்டு திருட்டை அரங்கேற்றியுள்ளனர். வீட்டில் ஆள் இல்லை என்று அறிந்தே இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.” என்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.