பீளமேட்டில் தீ விபத்து- கரும்புகை சூழ்ந்ததால் பதற்றம்…!

கோவை: தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தெர்மாகோல்கள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.

Advertisement

பீளமேடு பகுதியில் உள்ள கிரிஅம்மன் கோவில் வீதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு 15-க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தொழிற்சாலை வளாகத்தில் தீப்பிடித்தது.

விபத்து ஏற்பட்ட சிறுது நேரத்திலேயே தீ தெர்மாகோல் தொழிற்சாலையில் உள்ள அனைத்து பொருட்களிலும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

Advertisement

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் அதிகளவில் கரும்புகை எழும்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

Advertisement

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “குடியிருப்பு பகுதியில் இதுபோல தொழிற்சாலை இயங்கக்கூடாது இதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி கொடுக்கக் கூடாது. நல் வாய்ப்பாக இதில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை” என்றனர்.

VIDEO

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.