லேப்டாப்புடன் தொலைந்த Bag… நேர்மையான Delivery Boy செய்த நெகிழ்ச்சி செயல்! – VIDEO

கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லேப்டாப் உள்ளிட்ட முக்கியமான பொருட்களுடன் தவறவிட்ட கைப்பையை, நேர்மையான டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவர் வெளியிட்டுள்ள Instagram Reels வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கோவையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது அக்காவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவருடன் இருந்த கைப்பை எதிர்பாராத விதமாக சாலையில் தவறி விழுந்துள்ளது.

வீட்டிற்கு சென்ற பின்னரே கைப்பை தொலைந்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதிலும் அலுவலக லேப்டாப் மற்றும் முக்கியமான பொருட்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தாங்கள் பயணித்த சாலை முழுவதும் தேடியுள்ளனர். ஆனால், கைப்பை கிடைக்கவில்லை.

இதையடுத்து அருகில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்றதாகவும், சம்பவம் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை எனக் கூறி வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால் காவல் நிலையங்களுக்கு இடையே அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் இருந்து வந்த அந்த அழைப்பில், “நீங்கள் தொலைத்த கைப்பை எங்களிடம் பத்திரமாக உள்ளது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உடனடியாக சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்குச் சென்ற அந்தப் பெண், தனது கைப்பையைப் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த அலுவலக லேப்டாப் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எந்தவித சேதமும் இன்றி பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி அடைந்துள்ளார்.

கைப்பை எவ்வாறு காவல் நிலையத்திற்கு வந்தது என விசாரித்தபோது, சாலையில் கிடந்த கைப்பையை டெலிவரி ஊழியர் ஒருவர் கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது விலை உயர்ந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த டெலிவரி ஊழியருக்கும், தகவல் தெரிவித்து உதவிய காவல்துறையினருக்கும் அந்தப் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒருபுறம் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்க முயன்றபோது ஏற்பட்ட அலைக்கழிப்பு வேதனை அளித்ததாகவும், மறுபுறம் தனது உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த டெலிவரி ஊழியரின் நேர்மை மனிதநேயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த Instagram Reels வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நேர்மையுடன் கைப்பையை ஒப்படைத்த டெலிவரி ஊழியருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுடன் தொலைந்த கைப்பையை டெலிவரி ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...