அரசு கலைக்கல்லூரியில் PG Admission; சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் 2026–27-ம் கல்வியாண்டிற்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

கோவை அரசு கலைக்கல்லூரியில் ஷிப்ட்-1 மற்றும் ஷிப்ட்-2 என மொத்தம் 21 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் எம்.சி.ஏ. படிப்பை தவிர்த்து 20 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு கல்லூரி மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

முதலாம் ஆண்டு முதுநிலை படிப்புகளில் மொத்தம் 557 இடங்கள் உள்ள நிலையில், இதற்காக 5,046 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன் அல்லது மகள், என்.சி.சி. உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கள்) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள சமூக இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது.

விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தரவரிசை நிர்ணயத்திற்காக தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களுடன் இன்று காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கோவை அரசு கலைக்கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் வேகமெடுக்கும் மின் வாகன விற்பனை! 55 சார்ஜிங் மையங்கள் போதுமா?

கோவையில் நடப்பாண்டில் ஜூலை வரை 12,345 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.