லிப்ட் அமைத்து தருவதாக ரூ.7.5 லட்சம் மோசடி; சென்னை நிறுவன பிரதிநிதிகள் மீது வழக்கு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய மோசடி வழக்கில் கைதான நபரை போலீசார் சின்னியம்பாளையத்தில் மீண்டும் கைது செய்தனர்.

கோவையில் வணிகக் கட்டிடத்தில் லிப்ட் அமைத்து தருவதாகக் கூறி ரூ.7.50 லட்சம் பெற்றுக்கொண்டு பணியை மேற்கொள்ளாமல் மோசடி செய்ததாக சென்னை நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை சாய்பாபா காலனி (Saibaba Colony) ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54), தனது வணிகக் கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக சென்னை அரும்பாக்கம் (Arumbakkam) பகுதியில் செயல்படும் நிறுவனத்தின் பிரதிநிதிகளான ராஜ் டோரென்ஸ் மற்றும் பெஞ்சமின் ஆகியோரை அணுகியுள்ளார்.

அவர்கள் 15 நாட்களுக்குள் லிப்ட் அமைத்து தருவதாக உறுதியளித்து, அதற்காக ரூ.7.50 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் லிப்ட் அமைக்காததுடன், பெற்றுக்கொண்ட பணத்தையும் திருப்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் ராஜ் டோரென்ஸ் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...