பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய ஆங்கில ஆசிரியர் கைது; கோவையில் பரபரப்பு !

கோவை: மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (35), கோவையில் தங்கி காளப்பட்டி (Kalapatti) பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிளஸ்-1 மாணவர்களின் செல்போன் எண்களுக்கு ஆசிரியர் பாபு ஆபாசப் படங்களை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாணவர் ஒருவரின் பெற்றோர் கவனித்து அதிர்ச்சியடைந்த நிலையில், மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரித்துள்ளனர்.

Also Read:வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை; கோவையில் சாலை சேதம் பரபரப்பு

Advertisement

அப்போது, மேலும் சில மாணவர்களுக்கும் இதேபோன்று ஆபாசப் படங்கள் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், ராமநாதபுரம் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also read: கால்நடைகளுக்கு அடையாள எண் கட்டாயம்- கோவை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…

மாணவர்களுக்கு ஒழுங்கற்ற மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

NCC Exclusive: கோவையில் லஞ்ச வேட்டை; 10 பேர் மீது வழக்கு…!

கோவையில் தொண்டாமுத்தூர் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.