கோவை: கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் மற்றும் அரசூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam) துணை மின் நிலையம்:-
கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நாச்சிமநாயக்கன்பாளையம் (Naasimanaickenpalayam), பாம்பே நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீ ராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அரசூர் (ARASUR) துணை மின் நிலையம்:-
செல்லப்பம்பாளையம் பகுதி (Part of Sellappampalayam), பொதியம்பாளையம் (Pothiyampalayam), வாகராயம்பாளையம் (Vagarayampalayam), நீலாம்பூர் பகுதி (Part of Neelambur), குரும்பபாளையம் (Kurumbapalayam), ராசிபாளையம் (Rasipalayam), ஊத்துப்பாளையம் (Uthupalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
நேரம்: காலை 9:00 மணி – மாலை 5:00 மணி





