குடும்பத் தகராறில் விபரீதம்: 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி

கோவை : கோவை சிங்காநல்லூரில் குடும்பத் தகராறு காரணமாக 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, சித்தூர் பால்வாடி வீதியைச் சேர்ந்தவர் வினிதா (19). இவருக்கும் ராமு என்பவருக்கும் கடந்த 26.07.2024 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு பகுதியில் வசித்து வந்தனர்.

வினிதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செப். 3-ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினிதா தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ராமு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் வினிதாவை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வினிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வினிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால், சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...