ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம்- குழந்தைகளுடன் சென்று மகிழுங்கள்

கோவை: கோவை ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம் குழந்தைகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ப்ரோசோன் மாலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தும் டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுகள் ஆகியவை துவங்கியுள்ளன.

Advertisement

வருகின்ற இருபதாம் தேதி தீபாவளி பண்டிகை ஆனது கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சரவணம்பட்டி சாலையில் உள்ள ப்ரோசோன் மாலில் ஒளிநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இங்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று 35 லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளை கவரும் வண்ணம் தமிழ்நாட்டில் முதல்முறையாக ப்ரோசோன் டைனோசர் உலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காடு போன்ற அமைப்பில் அசையும் டைனோசர்கள், பெரிய அளவிலான டைனோசர் முட்டை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் உற்சாகமாக அதனை பார்த்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இளம் வயதினருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் ஷாப்பிங் நேரம் நீட்டிக்கப்பட்டு மேலும் அந்த இரண்டு தினங்களுக்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் இல்லை.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெங்களூர் டூ கோவைக்கு புகையிலை கடத்தல்- இருவர் கைது…

கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டு வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திய 450 கிலோ புகையிலை...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...