கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அபராதம் விதித்தார்.
கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதிய மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையாளராக கட்டா ரவி தேஜா புதிதாக பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் ரயில் நிலையம் அருகில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்துள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் அனுமதி இன்றி போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


