கோவை: கோவையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ்(45). இவரது மகள் ஜான்வி(9). புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் தேர்வீதி அருகே சென்றபோது, சாலையில் ஒரு மணி பர்சு கிடந்தது.
இதனைக் கண்டெடுத்த ஜான்வி அதனை திறந்து பார்த்தபோது, உள்ளே 9,500 ரூபாய், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, லைசென்ஸ் ஆகியவை இருந்தன. உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணத்தை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.
பாராட்டு

பின்னர் போலீசார், மணி பர்சில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்து மணிபர்சை தவற விட்ட நபரை கண்டறிந்தனர்.
அவர் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரீஸ்(33) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
Read also: கேஸ் தட்டுப்பாடு; கோவையில் சாலையோர கடைகள் மூடல்… சாமானியர்கள் அவதி
அங்கு மாணவி மணிபர்சை அவரிடம் ஒப்படைத்தார். மாணவியின் இந்த செயலை பாராட்டி ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.





Comments are closed.