கோவையில் மக்கள் உயிருடன் விளையாட்டு: காத்திருக்கும் கேபிள்கள்!

கோவை: கோவையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளில் கேபிள்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் இணைய சேவை, கேபிள் இணைப்பு, டெலிபோன் இணைப்பு ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை பெரும்பாலும் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் வழியாக ஆக்கிரமித்தே கேபிள் வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இது சில நேரங்களில் வாகன விபத்துக்கும் வழிவகுக்கிறது. ஊழியர்கள் அவசரகோலத்தில் மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது கட்டி கேபிள் வயர்களை இழுத்துச் செல்கின்றனர். இவற்றை முறையாகப் பராமரிக்காமல் பண்டலாகக் கட்டி சாலையோரத்தில் போட்டுவிடுகின்றனர்.

இதையும் படிக்கலாம்: மருதமலை உண்டியலில் குவிந்த தங்கம், வெள்ளி!

Advertisement

இதில் தடுக்கி வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது. இதேபோல், சமீபத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்ற ஒருவர் சாலையோரம் சிதறிக் கிடந்த கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.

மாநகரில் உள்ள பாலங்கள், சாலைகளில் கேபிள் வயர்கள் இதேபோல் சுருண்டு கிடக்கின்றன. மேலும் சில இடங்களில் கேபிள் வயர்கள் காற்றில் அசைந்து, 6 அடி உயரத்துக்கும் கீழாகவே தொங்குகின்றன.

Advertisement

இதனால் பைக்கில் செல்பவர்களின் கழுத்துக்கும் உத்தரவாதம் இல்லை. கேபிளில் சிக்கி விழுந்து படுகாயமடையும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவிநாசி ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இதே நிலைதான் நீடிக்கிறது.

எனவே நகரில் இணைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்களை முறையாகப் பராமரித்து ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Flipkart Link 2

Recent News

மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம். தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.