ரயில்வே துறையில் ஆட்குறைப்பு- DYFI கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

அண்மையில் ரயில்வே வாரியம் 14.8 லட்சம் பணியிடங்களில் இரண்டு சதவிகிதத்தை நடப்பு ஆண்டில் குறைக்க முடிவெடுத்திருப்பதற்கு பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம் ஒருபுறம் ரயில்கள் சேவை அதிகரித்தாலும் வேலையாட்கள் குறையும் சூழல் நிலவும் என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இது குறித்து பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா ரயில்வே துறை கடந்த 26ஆம் தேதி 30 ஆயிரம் பணியிடங்களை காலி செய்துள்ளார்கள் ஏற்கனவே ரயில்வே துறை தனியாருக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் வேலை வாய்ப்புகளையும் மறுத்துள்ளதாக தெரிவித்தார்.

ரயில்வே துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்படி இருக்கும் பொழுது வேலை ஆட்களை குறைப்பது காலி செய்வது என்பது ரயில்வே துறையை அழிக்கின்ற செயல் என்று தெரிவித்தார்.

Advertisement

பல்வேறு பட்டதாரிகள் இந்தியாவில் இருக்கும்பொழுது பிரதமர் மோடி இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு 30000 பணியிடங்களை காலி செய்து உள்ளார் என்று தெரிவித்தார். எனவே உடனடியாக மத்திய அரசு முப்பதாயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மேலும் பொது துறையை பாதுகாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...