கோவை: கோவை மாநகரில் அதிகாலையே மிதமான மழை பெய்ததால் வேலைகளுக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.
கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர்.
கோவையில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும் ஒரு பகுதிகளில் தொடர்ச்சியான மழையும் பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலம் ஆகவே கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. உக்கடம், சுங்கம், காந்திபுரம், ரயில் நிலையம், ஆத்துப்பாலம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் ரெயின் கோட் அணிந்த வண்ணம் பயணம் மேற்கொள்கின்றனர். காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கோவை மாநகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


