Breaking News: நல்லகண்ணு கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு ஸ்டாலின் விரைவு..!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

101 வயதாகும் தியாகியும், மூத்த அரசியல் தலைவருமான நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இதனிடையே, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனே சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விரைந்தார். மேலும், அவரது உடல்நிலை குறித்த மருத்துவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார்.

Advertisement
Nallakannus Health Report

இதனிடையே, மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான மு.வீரபாண்டியன், “நாட்டுக்காக போராடிய நல்லகண்ணு, தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்.

உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் நல்லகண்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...