சென்னை: பெண்களை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகை குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பெண்களுக்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தவெக எம்எல்ஏ.,க்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். பல்லவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரசியல் விமர்சனங்களின் பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் இடம்பெறக் கூடாது என்றும், பெண்களின் கண்ணியத்தை மதிக்கும் அரசியல் கலாச்சாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், பெண்களை அவமதிக்கும் வகையிலான பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.





