கோவை: சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு விசேஷ உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான்கு ஐந்து அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளங்கள் முழங்க மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களும் மலையாள மாணவர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.




