கோவை: கோவை பீளமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் ரோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன் (34) என்பவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஒரு வாரமாக பீளமேடு துளசியம்மாள் லே-அவுட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம், கட்டிடத்தின் 2-வது மாடியில் நின்று பெயிண்டிங் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரமேஸ்வரனை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது சகோதரி தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Comments are closed.