கோவை: ரோபோ ட்ரோன் LED Screen மூலம் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரோபோ மற்றும் ட்ரோன் LED Screen மூலம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வாக்கு சேகரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில்குமார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் ரோபோ, ட்ரோன் எல்இடி ஸ்கீர்ன் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரித்துள்ளார்.

கோவை காமராஜபுரம் பகுதியில் மாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் ட்ரோன்கள் மூலம் எல்.இ.டி திரையை பறக்க செய்து அதில் அவரது புகைப்படத்தையும், தமிழக வெற்றி கழகம் வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோபோ ஒன்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை இருக்கும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரோபோவை பார்த்த சிறுவர் சிறுமிகள் பொதுமக்களும் ஆர்வமுடன் ரோபோ உடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ள அவரது முயற்சி புதுமையாக உள்ளது.


