ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா… வீடியோ காட்சிகள்!

கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில், மின்னொளி அலங்காரத்தில் செம்மொழிப் பூங்கா ஜொலிக்கிறது.

காந்திபுரத்தில் ரூ.208.5 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது ஒரு நவீன மற்றும் கலாச்சார அடையாள பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பன்முக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன .

மேலும், மூலிகைத் தோட்டங்கள், நீரூற்றுகள், மலைக் குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்துடன், நடைபாதைகள், அமர்விடங்கள், பார்வையாளர்கள் ஓய்வு எடுக்க இடங்கள், பசுமை நிலப்பரப்புகள் ஆகியவை அனைத்தும் சுற்றுச்சூழல் புதுப்பிப்பு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

இந்த பூங்காவை நாளை காலை 11 மணிக்கு ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு மின் விளக்குகளால் பூங்கா வளாகம் அழகுபடுத்தப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp