பிராணிகள் வதை தடுப்பு சங்கம்- உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்கள்…

கோவை: பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் முழு செயல்பாட்டில் செயல்படும் பொருட்டு புதியதாக கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் தலைவர்/ மாவட்ட ஆட்சியரின் தலைமையில் 07.01.2026 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மேற்படி சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினை முழு வீச்சில் செயல்படுத்திடும் பொருட்டு சங்கத்திற்கு கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது அன்பு செலுத்தும் நபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் மற்றும் பொது மக்களை உறுப்பினர்களாக இச்சங்கத்தில் இணைத்து முன்னேடுத்து செல்ல புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த சேர்க்கை 01.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற உள்ளது. புதியதாக சங்கத்தில் சேருவதற்கு சாதாரண உறுப்பினர் ஆண்டு சந்தா தொகை ரூ.1000/- வீதம் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் ரூ.5000/- வீதம் Coimbatore District (SPCA) என்ற பெயருக்கு வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ இஸ்மாயில் இராவுத்தர் வீதி டவுன்ஹாலில் செயல்படும் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் மற்றும் கோயம்புத்தூர், கால்நடை பன்முக மருத்துவமனை, பிரதம மருத்துவர் அலுவலகத்தினை அணுகி, இரசீது பெற்றுகொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு தொலைபேசி எண்.0422-2381900 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நடைபெற்ற நாய்கள் சேம்பியன்ஷிப் கண்காட்சி…

கோவை: கோவையில் அனைத்து இன நாய் சேம்பியன்ஷிப் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலைஅறிவியல் தனியார் கல்லூரியில் தி கென்னல் ஆஃப் இந்தியா, கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்...

Video

நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில்...