மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மதுப்பழக்கத்தை நிறுத்திய வாலிபர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (66). இவரது இளைய மகன் பிரபு (32). பிரபு கேரள மாநிலம் பாலக்காட்டில் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான மது பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பிரபு மது ஏதும் குடிக்காமல் இருந்துள்ளார்.

திடீரென மதுவை நிறுத்தியதால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் அவர் தனது தாயாரிடம் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பிரபு சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...