கோவை: கோவை அடுத்த தமிழ்நாடு கேரளா எல்லையில் ரயில் மோதி தாய் யானை மற்றும் குட்டியானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான வாளையார் அடுத்த கேரள மாநில எல்லைக்குள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாய் யானை மற்றும் குட்டியானை ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் வாளையார் அடுத்த கேரள பகுதியில் தாய் யானை மற்றும் குட்டி யானை உட்பட 4 யானைகள் உலா வந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்பொழுது அவ்வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு யானைகள் மீதும் மோதி உள்ளது.
இதில் தாய் யானை குட்டியானை இரண்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன இது குறித்து கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாலை யானையின் உடல்களை மீட்ட வனத்துறையினர் உடல்களை புதைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சமீபத்தில் தமிழக எல்லைப் பகுதிக்குள் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது ஆனால் இந்த சம்பவம் கேரளா மாநிலத்திற்குள் நடைபெற்று உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்று யானைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அந்த நாளே இரண்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





