கோவை வரும் இரண்டு ரயில்கள் பாதை மாற்றம்! ரயில்வே அறிவிப்பு

கோவை: ரயில்வே துறையின் பராமரிப்பு பணிகள் காரணமாக, சில முக்கிய ரயில்கள் தற்காலிகமாக மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் பாயிண்ட் மற்றும் கிராசிங் பகுதிகளில் பரிசோதனை மற்றும் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் இரண்டு ரயில்கள் பாதை மாற்றங்களுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வண்டி எண் 18190 – எர்ணாகுளம் – டாடாநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக போத்தனூர் – இருகூர் வழியாக செல்லும். ஆனால் ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், இந்த ர்யைல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து – கோவை ஜங்க்சன் மற்றும் இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும்.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

வண்டி எண் 13352 – ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் இந்த ரயில், ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில், போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ஜங்ஷனுக்கு வராது.

Advertisement

பயணிகள் தங்கள் பயண்த் திட்டங்களை இந்த மாற்றங்களை பொருத்து தயார் செய்து கொள்ள ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Top 6 Tourist Spots in Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- கோவையில் மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

கோவை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.