கோவை: கோவை வடக்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து சிட்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கோவை வந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஒரு சில தினங்களில் வானதி பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே, வானதி சீனிவாசன் குணமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வானதி சீனிவாசன் வலது காலில் ஏற்பட்ட லேசான கிருமி தொற்று காரணமாக கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை மூலம் அவர் முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் நாளை வீடு திரும்புகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


