கோவையில் இரவில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை சாயிபாபா காலனி பிஎன் புதூர் பொது கழிப்பிடம் அருகே நேற்று முன்தினம் இரவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டில் பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதனால் யாரேனும் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

Advertisement


இது குறித்து அந்த பெண் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சீரநாயக்கன்பாளையம் காந்திநகரை சேர்ந்த தொழிலாளி ஜெயராஜ் (36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில் செங்கோட்டையன் பேட்டி!

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.