ரத்தினபுரியில் தீ விபத்து…

கோவை: ரத்தினபுரி பகுதியில் கார் ஒர்க் ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement

கோவை சிவானந்தாகாலனி, ரத்தினபுரி பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் அதிகமான குடியிருப்புகள் நெருக்க நெருக்கமாக அமைந்துள்ள பகுதியாகும்.

இந்நிலையில் இரத்தினபுரி புதுபாலம் அருகில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனடியாக அங்கு பணிபுரிந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தீ வேகமாக பரவியதால் பணியாளர்கள் உடனடியாக வெளியேறி உள்ளனர். தீயானது மளமளவென பரவிய நிலையில் ஒர்க் ஷாப்பில் இருந்த நான்கைந்து கார்கள் தீயில் சேதமடைந்தன. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு துறையினர் செல்வதற்குள் தீயால் ஏற்பட்ட கரும்புகை அருகில் இருந்த கடைகளையும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.