சவுரிபாளையம் ஜிவி ரெசிடென்சிக்கு வந்தது ஜி ஸ்கொயர்… ஒரு சென்ட் விலை தெரியுமா?

கோவை: கோவையில் ஜிவி ரெசிடென்சி அருகே ஜி ஸ்கொயர் நிறுவனத்தினர் புதிய வீட்டுமனை திட்டத்தை தொடங்கியுள்ளனர்

Advertisement

இந்தியாவின் முன்னணி வீட்டுமனை திட்ட மேம்பாட்டு நிறுவனமாக உள்ளது ஜி ஸ்கொயர். கோவையில் ஏற்கனவே இந்த நிறுவனம் பல இடங்களில் வீட்டுமனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே சவுரிபாளையம் சாலை ஜிவி ரெசிடென்சியை அடுத்த ராஜீவ் காந்தி நகரில் ஜி ஸ்கொயரின் புதிய வீட்டுமனை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பகுதிக்கு ‘ஜி ஸ்கொயர் – தி ரெசிடென்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

தி ரெசிடென்சி என்பது ஜி ஸ்கொயரின் கோவை மாநகரில் மிக முக்கியமான வர்த்தகம் மற்றும் குடியிருப்பு திட்டங்களில் ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement

கோவையின் மையப் பகுதியில் 750 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர்தர பிரத்யேக மனைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

தி ரெசிடென்சி திட்டத்தின் அறிமுகச் சலுகையாக ஒரு சென்ட் 40 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி இந்த திட்டத்தின் மதிப்பு குறுகிய காலத்தில் இருமடங்காக உயரும்.

இவ்வாறு பாலா ராமஜெயம் தெரிவித்தார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாணவர்களின் உயர்கல்விக்கு நிதி உதவி வழங்கிய கோவை ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில்,உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 2025-26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...