பொங்கல் நாளன்று விபத்து- மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்…

கோவை: பொங்கல் நாளில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டது.

Advertisement

பொங்கல் தினத்தன்று சாலை விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வடபருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் நாட்டுதுரை. கடந்த 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மாலை இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 16ம் தேதி நாட்டுதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடல் உறுப்பு தானம் பற்றி அவரது உறவினர்களிடம் எடுத்துக் கூறியதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர்.

தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனையின் படி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு தானம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

அதன்படி அவரது கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி உட்பட தனியார் மருத்துவமனைக்கும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

பின்னர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நாட்டுதுரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோர் அரசு மரியாதை செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...