கோவை: மூளை வளர்ச்சி குன்றிய மகனை போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்து கொள்ளும் தாயின் பாசம் கண்கலங்க செய்துள்ளது.
வேறு வழியின்றி மூளை வளர்ச்சி குன்றிய மகனை நாள்தோறும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்ளும் சத்துணவு ஊழிய தாயாரின் போராட்டம் கண்போரை கண் கலங்க செய்துள்ளது.
காலம் முறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அகவிலை படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே பத்தாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்திற்கு வரும் சில அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் சிலர் வேறு வழியின்றி அவர்களது குழந்தைகளை வேறு வழியின்றி அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனலட்சுமி என்ற அங்கன்வாடி பணியாளர் மூளை வளர்ச்சி குன்றிய அவரது மகனை வேறு வழியின்றி நாள்தோறும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்து பார்த்துக் கொள்கிறார்.
இந்தப் போராட்டம் தொடர்வதால் மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியவில்லை எனவும் பயண அலைச்சல் வெயிலின் தாக்கம் ஆகியவை கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட தனலட்சுமி அரசு விரைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்
நாள்தோறும் காலை மற்றும் மதிய வேளையில் அதிக வெயிலையும் பொருட்படுத்தாமல் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராடி வரும் நிலையில் வேறு வழியின்றி இது போன்று குழந்தைகளையும் அழைத்து வந்து சிரமங்களுடன் பார்த்துக் கொள்வது காண்போரை கண்கலங்க செய்கிறது.
எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்த காட்சிகளை காணும் பொதுமக்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

