கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 182 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8500 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழக மானிய குழு மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாத ஊதியத்தை 57,700 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் மேலும் அதனை 12 மாதத்திற்கும் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதேசமயம் பணி நிரந்தரம் உயிரிழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு இழப்பீடு ஆகியவற்றையும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்பொழுது வரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றாத நிலையில் தமிழகம் முழுவதும் விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

