கோவை: கோவையில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை – பீளமேடு ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அதிர்ச்சையடைந்த பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலைக் கைப்பற்றினர்.
மேலும், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 மதிக்கத்தக்க அந்த வாலிபர் கருப்பு நிற பனியன், காவி நிற வேட் டி அணிந்திருந்தார்.
அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடமைகளிலும் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை.
இதனிடையே அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியானாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

