கோவை: காரமடை ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா-வை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தேர்த்திருவிழா நாளை (02.03.2026) நடைபெற உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் மேட்டுப்பாளையம் – காந்திநகர் ஜங்ஷன் – சின்னத் தொட்டிபாளையம் -பெள்ளாதி – – கண்ணார்பாளையம் 4 ரோடு ஜங்ஷன் – கோட்டை பிரிவு ஜங்ஷன் -வழியாக கோவை செல்ல வேண்டும். கனரக வாகனங்கள்,
மேட்டுப்பாளையம் – தென்திருப்பதி நால்ரோடு -> அன்னூர் -> கோவில்பாளையம் -வழியாக கோவை செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள்,
பெரியநாயக்கன்பாளையம் – பெட்டதாபுரம் – திம்மம்பாளையம் – மங்களக்கரை புதூர் –டீச்சர்ஸ் காலனி பாலம் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வேண்டும்.
திருவிழாவிற்கான வாகன நிறுத்தம் காவல்துறை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். அனுமதியில்லாமல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, அறிவுறுத்தப்பட்ட வழித்தடங்களைப் பின்பற்றி பயணிக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

