கோவையில் ரூ.31.22 கோடியில் காவலர் குடியிருப்புகள்!

கோவை: சிங்காநல்லூரில் ரூ.31.22 கோடி மதிப்பீட்டில் காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவையில் காட்டூர், பீளமேடு, உக்கடம், போத்தனூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ரத்தினபுரி, செல்வபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன.

குற்றப்புலனாய்வு, சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பநாயக்கன்பாளையம், உப்பிலிபாளையம், பீளமேடு ஆகிய இடங்களில் காவலர் குடியிருப்புகள் உள்ளது.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூரில் காவலர் மற்றும் தலைமை காவலர்களுக்கு குடியிருப்புகள் ரூ. 31.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதன் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

Advertisement

இதனை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தலா 664 சதுரடி பரப்பளவில் 100 குடியிருப்புகள் உள்ளன.

இவை நவீன கட்டுமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாநகர காவல் துறையினரின் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 10,000 மரக்கன்றுகள்- பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேய்ச்சல் நிலத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.