கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை நீதிமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த சோதனையில் அது புரளி என்று தெரியவந்தது.

இந்த நிலையில் இன்றும் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ந்இந்த தகவல் கோவை ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் போலிசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை செய்தனர். இலவச சட்ட உதவி பாதுகாப்பு மையத்தில் உள்ள ஒவ்வொரு அறை மற்றும் ஊழியர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், ஆவணங்கள் இருந்த பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு போலீசார் கருவி மூலம் சோதனை செய்தனர்.

ஆனால் நீண்ட சோதனைக்கு பிறகு இந்த வெடிகுண்டு மிரட்டலும் புரளி என்று தெரியவந்தது. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு வந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Whatsapp மூலம் சேவை- ChatBot யை அறிமுகம் செய்த கோவை காவல்துறை…

கோவை: பொதுமக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையில் Whatsapp Chat Bot சேவையை மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. கோவை மாவட்ட காவல்துறை சார்பில் "Kovai Digi Cop" என்ற Whatsapp Chat...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.