கோவை: தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி, ஆய்வு செய்து வருகிறார்.
இதனிடையே கோவை வந்த அவர் நேற்று காலை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஐ.ஜி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மருதமலை உண்டியலில் குவிந்த தங்கம், வெள்ளி!
இதையடுத்து கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நகரில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போக்குவரத்து தீர்வு, விசாரணையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்குகள், போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிடவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாநகர துணை கமிஷனர்கள் அசோக் குமார், கார்த்திகேயன், தேவநாதன், நுண்ணுறிவு பிரிவு உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை முடித்துக் கொண்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

