கோவை: கோவையில் தொழுகைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நசீர் (38). அவரது இளைய மகன் அனஸ் (9). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!
நேற்று முன்தினம் இரவு அனஸ் செல்வபுரம் பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
இதனால் நசீர் பல்வேறு இடங்களில் தனது மகன் அனசை தேடி கொண்டு இருந்தார். அப்போது ஜமாத்தை சேர்ந்த துணை செயலாளர் அகமது என்பவர் நசீருக்கு போன் செய்து அனஸ் பள்ளி வாசல் அருகே மயங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நசீர் விரைந்து சென்று தனது மகன் அனசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அனசை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு நசீர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அது அங்குள்ளவர்களை கண் கலங்க வைத்தது. இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

