துடியலூர் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

கோவை: கோவை துடியலூர் அருகே சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில் துடியலூர் போலீசார் ஆகியோர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த 2 பேர்கள் திடீரென தப்பி ஒடினர். உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட்டில் ஆட்டோ வைத்திருந்ததாகவும், அப்போது 2 பேர் தொப்பம்பட்டிபிரிவு செல்ல வேண்டும் என்று ஆட்டோவில் ஏறியதாகவும், தற்போது அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தப்பி ஓடியவர்கள் ஆட்டோவில் விட்டுசென்ற பைகளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 12 கிலோவுக்கும் மேலாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...