கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவு

கோவை:கோவையில் நேற்று நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானது.

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று கோவை வழக்கறிஞர் சங்க அரங்கில் நடந்தது.

இதில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், துணைத் தலைவர்கள் பதவிக்கு அய்யப்பன், பிரபு சங்கர், திருஞானசம்பந்தம் ஆகியோர் போட்டியிட்டனர்.

செயலாளர் பதவிக்கு ஆனந்தீஸ்வரன், சிவசாமி தமிழன், சுதீஷ், விஜயராகவன் ஆகியோரும் போட்டியிட்டனர்.

Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

3,647 பேரில் 2,626 பேர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். 72% வாக்குகள் பதிவானது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. புதிய நிர்வாகிகள் ஏப்ரல் 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த தேர்தல் கோவை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டது…

கோவை: கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டது கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமூகநீதி சாசனம் என்ற...

Video