ஜிடி மேம்பாலத்தில் இரவு நேர பயணத்திற்கு அனுமதி இல்லை

கோவை: ஜி டி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவை ஜிடி மேம்பாலத்தில் ஐந்து நாட்களுக்கு இரவில் பயணம் செய்ய அனுமதி இல்லை என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கோவை மாநகர் அவிநாசி சாலையில் உள்ள ஜிடி மேம்பாலத்தில் வருகின்ற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் Optical Fiber Cable பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

Advertisement

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக உயர்மட்ட மேம்பாலத்தில் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெய்யால் ஆறு விஷம்?- புதிய அரசு நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை…

கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.